• #1387 (no title)
  • 2024 நாடாளுமன்றத் தேர்தல்
  • About Us
  • Articales
  • Articles
    • දේශපාලන ඉදිරි දර්ශන ලියවිල්ල – එක්සත් සමාජවාදී පක්ෂය
  • Contact USP
  • Donate
  • Join Us
  • May Day
  • MayDay
  • MAYDAY 1
  • MAYDAY 1
  • New Menu 1
  • Ratutaruwa
  • Ratutaruwa artical
  • Ratutharuwa
    • ratutaruwa
  • Ratutharuwa
  • Sri Lanka:Tremendous success of book launch in Jaffna
  • Tamil
  • The Left
  • this year
  • USP MAYDAY
    • MAY DAY 2017
  • උතුරේ මහ ඇමති විග්නේශ්වරන් ප්‍රමුඛ දෙමළ නායකයින් පිරිසකගේ සහභාගීත්වයෙන් “එලුංග තමිල්” නම්න් පැවති උද්ඝෝෂණය කෙරෙහි උද්ගතව ඇති තත්වය ගැන එක්සත් සමාජවාදී පක්ෂය, වමේ හඬ සංවිධානය, අක්ෂය සාමූහිකය එක්ව පවත්වන ලද පුවත් පත් සාකච්ජාව
  • ප්‍රජාතන්ත්‍රවාදය සඳහා උද්ඝෝෂකයෝ
Lanka Socialists
No Result
View All Result
No Result
View All Result
Lanka Socialists
No Result
View All Result

தெற்கின் முதலாளித்துவ தலைவர்களிடம் மீண்டும் ஏமாற வேண்டாம் !

Taniya by Taniya
March 19, 2024
in Articles
0
தெற்கின் முதலாளித்துவ  தலைவர்களிடம் மீண்டும் ஏமாற வேண்டாம் !

சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாறு முழுவதும், தேசிய இனப் பிரச்சினை உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தமிழ்த் தலைவர்கள் தென்னிலங்கையின் சிங்கள முதலாளித்துவத் தலைவர்களை நம்பி அவர்களுக்குப் பின்னால் சென்றனர். ஜீ.ஜீ பொன்னம்பலம் – செல்வநாயகம் முதல் சம்பந்தன் வரையிலான தமிழ் தலைவர்கள் சிங்கள முதலாளித்துவத் தலைவர்களின் பின்னால் இழுபடும் அரசியலையே கடைப்பிடித்தனர். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்தபோதிலும், தேசிய இனப் பிரச்சினை மோசமடைந்ததே தவிர, ஒரு தசமதானம் கூட முன்னேற்றம் அடையவில்லை. யுத்தத்தின் விளைவாக, 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைக்கூட நடைமுறைப்படுத்த தென்னிலங்கையின் எந்தவொரு ஜனாதிபதியும் நேர்மையுடன் அனுமதிக்கவில்லை. அத்துடன் யுத்தத்தின் போது காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தொடர்பில் இதுவரை ஆட்சி செய்த எந்வொரு சிங்கள ஜனாதிபதியும் நீதியை நிலைநாட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தப் பின்னணியில், எதிர்காலத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து புதிய விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பிக்க வேண்டும். பழைய பாரம்பரிய அரசியல் கட்டமைப்பிலிருந்து விடுபட்டு, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்தபட்ச பொதுவேலைத்திட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும். சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் தென்னிலங்கைத் தலைவர்கள் தற்போது தமிழ் மக்களுக்கு தேசிய இனப் பிரச்சினை என்று ஒன்று கிடையாது என்பது போல் கருதி செயற்படுகின்றனர். உண்மையில் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும்,ஒன்றிணைந்த சக்தியாகச் செயற்பட்டால், சிங்களத் தலைவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும் மேலைத்தேய முதலாளித்துவ அரசுகளோ அல்லது மோடி போன்ற இந்திய முதலாளித்துவத் தலைவர்கள் ஊடாகவோ சிங்கள முதலாளித்துவத் தலைவர்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு உதவியும் ஆதரவும் பெறலாம் என்ற எண்ணம் முற்றிலும் தவறானது. மோடியின் பாரதீய ஜனதா கட்சியை நிராகரிப்பதன் மூலம், தமிழக தமிழ் மக்கள் மோடி பின்பற்றும் இந்துத்துவ தேசியவாத அரசியலைப் புறக்கணிப்பதையே காணமுடிகிறது.

அதேசமயம் சுமார் 2 வருடங்களாக ஜனாதிபதி பதவியில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க,தனது ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படுவதாகக் காட்டிக்கொள்கின்றார். பொலிஸ் அதிகாரங்களைத் தவிர ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என அவர் கூறுவது அப்பட்டமான ஏமாற்று வித்தையாயாகும். இதன் மூலம் ரணில் எவ்வளவு தூரம் சிங்கள இனவாத சக்திகளுக்கு அடிபணிந்துள்ளார் எனப் புரிகிறது. தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற ஏமாற்று வேலைகளை நிறுத்திவிட்டு, 8 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலையாவது நடத்த ஏற்பாடு செய்யுமாறு ரணிலுக்கு சவால் விட வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் சட்டப் பிரச்சினையை தீர்த்து உள்ளுாராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பை நடத்த முடியும் என்ற உண்மையை அவர் திட்டமிட்டு மூடிமறைத்துள்ளார்.

இந்தப் பின்னணியில், தெற்கில் உள்ள உழைக்கும் வர்க்கம் மற்றும் வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தலைமையிலான உண்மையான இடதுசாரி சக்திகளின் வெளிப்படையான ஆதரவுக்கான இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். வடக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரே கட்சி என்ற வகையில் ஐக்கிய சோசலிசக் கட்சி இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் ஒன்றிணைந்த இடதுசாரி சக்தியைக் கட்டியெழுப்புவதன் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு சிங்கள, தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம். கடந்த காலம் முழுவதும் ,வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பல்வேறு அழுத்தங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக ஐக்கிய சோசலிசக் கட்சி போராடியுள்ளது. சிங்கள இனவாத கோஷ்டிகள், தமிழ் மக்களின் உரிமைளை ஒடுக்குவதற்கும் பறிப்பதற்கும் எதிராக வடக்கிலும் தெற்கிலும் ஐக்கிய சோசலிசக் கட்சி பகிரங்கமாகத் தொடர்ந்து போராடி வருகிறது.

  •  வடக்கின் இயற்கை வளங்களை வெளிநாட்டுக் கொள்ளை வியாபாரிகள் சூறையாடுவதை அனுமதிக்காதே !
  •  தேசியஇனப் பிரச்சினையைத் தீர்க்க வடக்கு-தெற்கு இணைந்த இடதுசாரி சக்தியைக் கட்டியெழுப்புவோம் !
  •  போரின் போது தமிழர்களிடம் இருந்து இராணுவம் பறித்த காணிகளை மீள வழங்கு !
  •  தொல்லியல் என்றப் பெயரில் வடக்கு கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கலை நிறுத்து!
  •  இந்தியக் கள்ள வியாபாரிகளிடம் இருந்து வடபுலத்தின் கடல் பிராந்தியத்தைக் காப்பாற்றி ,வடக்கில் வாழும் மீனவர்கள் கடலில் சுதந்திரமாகப் பயணிக்கும் உரிமைக்கு உத்தரவாதம் வழங்கு !
Previous Post

ආටක නාටක – ලලිත් අබේසිංහ

Next Post

நீதி கேட்டு பாதையில் 7 ஆண்டுகள்

Next Post
நீதி கேட்டு பாதையில் 7 ஆண்டுகள்

நீதி கேட்டு பாதையில் 7 ஆண்டுகள்

Categories

  • Activities
  • Articles
  • Books
  • From the Press
  • Local
  • Other
  • Persepectives
  • Ratutharuwa
  • Upcoming Events
  • USP Statements
  • Video/Audia
  • World News
  • අවනඩුව

Archives

  • February 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • May 2022
  • April 2022
  • February 2022
  • December 2021
  • November 2021
  • April 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • April 2019
  • March 2019
  • February 2019
  • January 2019
  • December 2018
  • November 2018
  • October 2018
  • September 2018
  • August 2018
  • July 2018
  • June 2018
  • May 2018
  • March 2018
  • February 2018
  • January 2018
  • December 2017
  • November 2017
  • October 2017
  • September 2017
  • August 2017
  • June 2017
  • May 2017
  • March 2017
  • February 2017
  • January 2017
  • November 2016
  • October 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • September 2015
  • August 2015
  • July 2015
  • June 2015
  • May 2015
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Feb   Apr »

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.